1867 , 1880 மற்றும் 1885 ஆம் ஆண்டு அருட்பா புத்தகங்கள் மறுபதிப்பு

1867 ஆம் ஆண்டு திருவருட்பா பிரதிகள் பெறப்பட்ட விபரங்கள் :
1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருவருட்பா புத்தகங்களில் எமக்கு இரண்டு புத்தகங்கள் கிடைத்தன.

முதற் புத்தகம் : முதற் புத்தகம் நாகை மாவட்டம் எட்டுக்குடி சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் 50 ஆண்டு காலமாக செயலாளராக பணி செய்து வரும் கொளப்பாடு திரு.K . சிவஞானம் அவர்களிடமிருந்து 23.11.2014 அன்று அன்புடன் பெற்றுக்கொள்ளப்பட்டது.
அவர்களது அகவை 75.
முகவரி : 22/D – 5 , ஐ நூற்றுபிள்ளையார் கோயில் , தெற்குத் தெரு , விஜயபுரம் , திருவாரூர் – 610 001.
அலைபேசி : 9443738458.
சிவஞானம் ஐயாவிடமிருந்து சில வார்த்தைகள் : ” நான் சுமார் 8 வயது முதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதியதை காதால் கேட்டு இருக்கிறேன். தொழுவூர் வேலாயுதனார் எழுதிய ‘திருவிருந்திடு’ எனத் தொடங்கும் குரு தோத்திரம் முதல் 11 பாடல்களை பாராயணம் செய்து , 1957 இல் வடலூர் தைப்பூசம் வந்தது , பெருமானின் சன்மார்க்கப்பணியில் ஈடுபாடு கொண்டு 22.04.1966 முதல் எட்டுக்குடி சன்மார்க்க சங்கத்தில் செயலாளராக பணியாற்றவும் பெருமான் அருள்புரிந்துள்ளார்கள் . வடபாதி மங்கலத்தில் இருந்து ஓர் அன்பர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புத்தகத்தை எனக்குக் கொடுத்தார்.

 

இரண்டாவது புத்தகம் : திரு.அன்பரசு ( பெங்களூர் ) அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அவர்களது தொடர்பு எண் : 99160 32127.

 

1880 ஆம் ஆண்டு புத்தகம் : அட்வகேட் திரு.சேகர்ராஜா ( வண்ணாரப்பேட்டை சன்மார்க்க சங்கம் ) அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

 

1885 ஆம் ஆண்டு புத்தகம் : 3 புத்தகங்கள் கிடைத்தன. முதற் புத்தகம் திரு.சேகர் ராஜா அவர்களிடமிருந்தும் , இரண்டாவது புத்தகம் திரு.பாண்டு ரங்கன் ஐயா அவர்களிடமிருந்தும் , மூன்றாவது புத்தகம் திரு.அன்பரசு அவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. 1867, 1880, 1885 ஆம் ஆண்டு திருவருட்பா புத்தகங்களை மறுமதிப்பு செய்வதற்கு புத்தகங்கள் கொடுத்து உதவிய இவர்கள் அனைவருக்கும் அருட்பா பதிப்பகத்தின் நன்றி நிறைந்த வணக்கங்கள் !

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *