PRINT WEEK OF THE YEAR-2015

அருட்பா பதிப்பகத்தின் வெளியீடுகளில் “பழமை வாய்ந்த அருட்பா புத்தகங்களான 1924 ஆம் ஆண்டு வெளிவந்த காரணப்பட்டு கந்தசாமி அவர்களின் வெளியீடான “திருவருட்பா 1 முதல் 6 திருமுறைகளும் உரைநடையும் “,திருவருட்பிரகாச வள்ளலார் 1865 மற்றும் 1867 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த “திருவருட்பா 1 முதல் 5 திருமுறைகளும் ” மற்றும் “திருவருட்பா ஆறாம் திருமுறைகளும் ” மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டது.
இப்பதிப்பிற்காக பழைய பிரதிகள் வைத்திருந்த பெரியவர்களிடம், அனுமதி பெற்று வாங்கி ,அப்புத்தகத்தினை ஸ்கேன் செய்து, அதிலுள்ள அழுக்கினை சுத்தம் செய்து ,உடைத்திருந்த எழுத்துக்களை சரிசெய்து,மீண்டும் புதிய தொழில் நுட்பத்துடன் வெளியிட ஒவ்வொரு புத்தகத்திற்கும் சுமார் ஆறு மாத காலத்திற்கு மேல் ஆகியது.
இந்த புத்தங்களை சிறப்புடன் புதிய தொழில் நுட்பத்துடன் அச்சிட்டுக்கொண்ட SFA PRINT PVT LTD. நிறுவனத்திற்கு PRINT WEEK OF THE YEAR-2015 [TAMIL CLASSICAL ] விருது கிடைக்கப் பெற்றுள்ளது, மகிழ்ச்சிக்குரிய செய்தி.அருட்பா பதிப்பகமும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *