அருட்பா பதிப்பகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது
அருட்பா பதிப்பகத்தின் வெளியீடுகளில் ஒன்றான 1932 காரணப்பட்டு கந்தசாமி அவர்கள் வெளியிட்ட புத்தகத்தின் மறுபதிப்பு சென்றவருடம் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தை சிறந்த முறையில் அச்சிட்டுக் கொடுத்த SFA PRINT PVT LTD நிறுவனம் சிறந்த பதிப்பகத்திற்கான விருதிற்காக பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. நேற்று முன் தினம் பம்பாயில் நடைபெற்ற விழாவில் SFA PRINT PVT LTD நிறுவனத்தின் உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாசன் அவர்கள் WINNER க்கான விருதினைப் பெற்றுள்ளார். அருட்பா பதிப்பகம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.